பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய விருதை வழங்கி அதிபர் எல்-சிசி கௌவுரவித்தார்.
கடந்த ஜனவரி 2023 இல் இந்தியாவின் குடியரசு தின விழாவில் ‘தலைமை விருந்தினராக’ கலந்துகொண்ட எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி அழைத்ததன் பேரில் பிரதமர் மோடி, தனது அமெரிக்க அரசு முறைப்பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக எகிப்து சென்றடைந்தார்.
அங்கு ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிரதமர் மோடி, எகிப்தின் வரலாற்று சிறப்புமிக்க அல்-ஹகிம் மசூதி மற்றும் கெய்ரோவில் உள்ள ஹெலியோபோலிஸ் காமன்வெல்த் போர் கல்லறைக்கு சென்று பார்வையிட்டார். அந்த கல்லறையில் முதல் உலகப் போரில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
#WATCH | Egyptian President Abdel Fattah al-Sisi confers PM Narendra Modi with ‘Order of the Nile’ award, in Cairo
‘Order of the Nile’, is Egypt’s highest state honour. pic.twitter.com/e59XtoZuUq
— ANI (@ANI) June 25, 2023
அதன்பிறகு, எகிப்து நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதை எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கெளரவித்தார். உலகின் பல்வேறு நாடுகள் பிரதமர் மோடிக்கு வழங்கிய 13வது உயரிய அரசு விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.