பின்லாந்து நாட்டின் கடல் பரப்பில் உறைபனிக்கு நடுவே சிக்கி தவிக்கும் கப்பலை மீட்கும் முயற்சிகள் தொடங்கி உள்ளன.
அந்நாட்டின் வடக்கு கேஸ்ட்ரோபோனியா பிராந்தியத்தில் உள்ள 981 பேர் மட்டுமே வசிக்கும் குட்டி தீவான ஹைலூஓட்டோவுக்கு அருகே கப்பல் ஒன்று உறைபனிக்கு நடுவே சிக்கிக் கொண்டது.
அந்த கப்பலை மீட்க, உறைபனியை உடைத்து பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நகரத் தொடங்கி உள்ள கப்பலை பின்லாந்து நாட்டின் துறைமுக நகரான உலுவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 53 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கடல் வழியை, பனிக்கு நடுவே கடக்கும் பயணத்தை கப்பல் தொடங்கி உள்ளது