ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு.., நீதிமன்றம் நோட்டீஸ்..!

எடப்பாடி பழனிச்சாமி , ஓ.பி.எஸ் மற்றும் சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றம் தொடர்ந்த வழக்கில், அதிமுக கட்சி விதிப்படி பொதுச்செயலாளர் கட்சியின் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படவேண்டும் எனவும் இந்த விதியை திருத்தமுடியாது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுச்செயலாளர் பதவியை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும் பொதுச்செயலாளரை நீக்கியது கட்சிக்கு முரணானது எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை பொதுக்குழு, செயற்குழு நியமித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாகவும், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பிறகு தற்போதைய ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி இணைந்து பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டி பொதுச்செயலாளர் பதிவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியில் நடைமுறையில் உள்ள இரட்டை தலைமையையும் உறுப்பினர்கள் விரும்பவில்லை எனவும் கடந்த 2014 அக்டோபரில் நடத்தப்பட்ட உட்கட்சிதேர்தலில் தெரிந்தெடுக்கப்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் விரைவில் தேர்தலை நடத்துவதாகவும் உறுதி அளித்துவிட்டு ஓராண்டிற்கு மேல் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை என அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இந்த மனுவிற்கு ஜூலை 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்க அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி மற்றும் சசிகலாவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 7-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

murugan

Recent Posts

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி ?

Watermelon milk shake-  தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். நீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி நம் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை…

5 mins ago

பாரம்பரியமிக்க பானக்கத்தின் ஆச்சரியமூட்டும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க.!

பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான்  நம் ஊர்களில் திருவிழாக்கள்,…

54 mins ago

‘ஹாய் காய்ஸ் நான் உங்கள் தோனி’ .. தோனி பெயரில் மோசடி செய்ய முயற்சி!

Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X  தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…

1 hour ago

இந்த அடி பத்தாது கண்ணா! ரஜத் படிதாருக்கு அட்வைஸ் செய்த அஜய் ஜடேஜா!

Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார்  ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…

1 hour ago

புதுச்சேரியில் ஜூன் 6 பள்ளிகள் திறப்பு…தமிழகத்தில் எப்போது.? குழப்பத்தில் மாணவர்கள்.!

Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…

2 hours ago

தெலுங்கானாவில் 11,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.! 7 மாணவர்கள் தற்கொலை.!

Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…

2 hours ago