ஈஸ்டர் தினம் – இயேசு கிறிஸ்து ஏன் மரித்தார்?

பிதாவாகிய தந்தை தூய்மையாக இருந்த நாசரேத் பெண்மணியாகிய மரியா மீது நிழலிட்டு பரிசுத்த முறையில் கரு உருவாக செய்தார். அதன் பின்பு மரியா கருவுற்று அழகிய குழந்தையான கடவுளின் குழந்தை இயேசுவை  பெற்றெடுத்தார்.

அவரை பெற்ற போதே யூதர்களை நிலையாக ஆட்சி செய்ய கூடியவர் இவர் தான் எனும் செய்தி அறிந்து மன்னன் ஏரோது கொள்ளுவதற்கு ஆள் அனுப்பினான். ஆனால், அவர் அதிலிருந்து மீண்டார். 

அதன் பின்பு அவர் தனக்கென 12 சீடர்களை உருவாக்கி கொண்டு தனது தந்தை பற்றி அனைவர்க்கும் சொல்லி வந்தார். பலருக்கு அற்புதம் செய்தார். இதை பார்த்த சிலர் அவரை கொள்ள வகை தேடிய போது, அவரது சீடனாகிய யூதாஸ் 21 வெள்ளி காசுகளுக்காக காட்டி கொடுத்தான்.

 

அதன் பின்பு சிலுவை சுமந்த இயேசு ஏற்கனவே திரு வேதகாமத்தில் எழுதியிருக்கும் வாக்குத்தத்தம் நிறைவேற தன்னை ஒப்புக்கொடுத்தார். முந்தைய காலங்களில் தவறு செய்பவர்கள் பரிகாரமாக ஆடு அல்லது மாடுகளை கொன்று பலி செலுத்துவார்கள்.

ஆனால், இயேசு பாவிகளுக்காகவும், இனி வரும் மக்கள் செய்யும் பாவங்களுக்காகவும் தன்னையே பாவ நிவாரண பலியாக ஒப்பு கொடுத்தார். மரித்த இயேசு எழுதியிருக்கிற படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து தனது சீடர்களுக்கு காட்சி அளித்தார்.

அதன் பின்பு தனது வேலை முடிந்துவிட்டதால் தனது தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருப்பதற்காக விண்ணகம் ஏறி சென்றார். இயேசு மரித்த நாளை புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்தெழுந்த ஞாயிரு தினத்தை ஈஸ்டர் தினமாகவும் கொண்டாடுகிறோம். 

author avatar
Rebekal