7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 7 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். என்றும் மேலும் தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூலான தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு விழுப்புரம், கடலூர் , மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானாலும் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலாளித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.