குதிரை தொழுவத்தின் கீழ் போதைப்பொருள் தயாரிப்பு.! 20 பேரை கைது செய்த போலீஸ்.!

  • குதிரை தொழுவத்தின் கீழ் 4 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து சட்ட விரோதமாக செயல்பட்ட போதை சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் அதிரடியாக சோதனையிட்ட போலீசார் 20 பேரை கைது செய்தனர்.

ஐரோப்பாவில் குதிரை தொழுவத்தின் கீழ் 4 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து சட்ட விரோதமாக செயல்பட்ட போதை சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் அதிரடியாக சோதனையிட்ட போலீசார் 20 பேரை கைது செய்தனர். இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்டலுசியன் (Andalusian) நகரில் உள்ள தொழுவம் ஒன்றில் சுரங்கம் அமைத்து தடை செய்யப்பட்ட தொழிற்சாலை செயல்பட்டு வந்ததாகவும், அது ஒரு மணி நேரத்தில் 3500 சிகரெட்டுகளை தயாரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளது.  மேலும், அங்கிருந்து 1,53,000 சிகரெட் பாக்கெட்டுகள், 17,600 கிலோ புகையிலை தூள் மற்றும் 144 கிலோ கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் இதில் கைது செய்யப்பட்ட 20 பேர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான 30 வயதுடைய டேனியல் டூப்ஸ் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அடையாள ஆவணத்தை மோசடி செய்த குற்றங்களுக்காக பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றனர். இதனை சர்வதேச நடவடிக்கை காரணமாக யூரோபோல், மத்திய இயக்க பிரிவின் கீழ் பொருளாதார குற்றக் குழு மற்றும் பிரிட்டிஷ் பாதுகாப்புப் படையினரின் பல நிறுவன ஆதரவுடன் கார்டியா சிவில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்