ரூ.21 கோடி மதிப்புள்ள போதை மாதித்திரைகள் மும்பையில் சிக்கியது.! வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி.?

மும்பை விமான நிலையத்தில் இருந்து 21 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஒரு கும்பல் 21 கோடி ரூபாய் மதிப்புள்ள சைக்கோட்ரோபிக் மாத்திரைகள் (போதை மாத்திரைகள்) சூடான் நாட்டிற்கு கடத்த முயன்றுள்ளது.

இதனை கண்டறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் , 21 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 10 லட்சம் மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.  இந்த போதை மாத்திரை கடத்தல் தொடர்பாக இதுவரை பெங்களூரு, ஆந்திரா மாநிலம் குண்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தங்கள் விசாரணையை விரிவுட்படுத்தியுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment