குடிக்க காசு கொடு மா…கொடுக்க முடியாது போடா..கொடுக்கமட்ட தாய்-தந்தையை கொடூரமாக வெட்டி..!மகன் தப்பி ஓட்டம்

மது குடிக்க பணம் தர பெற்றோர் மறுத்ததால் ஆத்திரமடைந்த மகன், தனது பெற்றோரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தை அடுத்த வெள்ளிமலைபட்டினத்தை சேர்ந்தவர் கார்த்தி என்ற இளைஞர்.இவர் மதுவிற்கு அடிமையாகி குடிப்பதை வழக்காக கொண்டுள்ளார்.சம்பத்தன்று  மது வாங்குவதற்காக தனது தந்தை சுந்தரம் மற்றும் தாய் துளசியிடம் பணம் கேட்டு உள்ளார். தன் கண் முன்னே எவ்வாறு மகன் அடிமையானதை எண்ணி மனம் நோந்து கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறு அவர் காசு கேட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பெற்றோர் பணம் கொடுக்க மறுத்து உள்ளனர்.

வீட்டிற்கு வெளியே சென்று கடன் வாங்கி மது குடித்துவிட்டு அதிகாலை வீடு திரும்பிய கார்த்தி, தூங்கிக்கொண்டிருந்த தந்தை சுந்தரம் மற்றும் தாய் துளசியை துடிதுடிக்க அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு  அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.இதனால் அச்சம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த  போலீசார், உடல்களை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பெற்ற தாய் தந்தையே கொலை செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாக உள்ள கார்த்தியை போலீசார் தேடிவருகின்றனர்.

author avatar
kavitha