நடனமாடி கொண்டிருந்த போதே மாரடைப்பால் உயிரிழந்த நாடக கலைஞர் வைரலாகும் வீடியோ

ஜம்முவில் நடனமாடி கொண்டிருந்த போதே மாரடைப்பால் உயிரிழந்த நாடக கலைஞர் வைரலாகி வரும் வீடியோ.

ஜம்முவின் பிஷ்னாவில் விநாயக சதுர்த்தி நிகழ்வின் போது மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த நாடக கலைஞர் ஒருவர் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், நாடக கலைஞர் ஒருவர் பார்வதி வேடமணிந்து உற்ச்சாகமாக நடனமாடி கொண்டிருக்கும் போது மயங்கி விழுவதையும், பின்னர் சிறிது நேரத்தில் எந்த வித அசைவுமில்லாமல் கிடப்பதும் பதிவாகியுள்ளது.

author avatar
Varathalakshmi

Leave a Comment