தெர்மாகோல் போட்டு மூடி வச்சிருக்கோம் கவலை படாதீங்க..! செல்லூர் ராஜுவை கலாய்த்த அமைச்சர் துரைமுருகன்..!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியுள்ளது. சட்டப்பேரவை கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

கடந்த அம்மாவின் ஆட்சியில், எங்கள் மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ரூ.1,296 கோடியில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரை மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. அந்த பணி ஆமை வேகத்தில் நடக்கிறது, தற்போது மதுரையில் சாக்கடை நீர், குடிநீருடன் கலந்து வருகிறது.

எனவே மக்களுக்கு 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், வீட்டில் உள்ள பிள்ளைகள் வெளியவே வராமல் தண்ணீரை பயன்படுத்தும் இந்த திட்டத்தின், பணிகளை விரைவாக முடித்து கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் அவர்கள், செல்லூர் ராஜூ கேட்கும் தண்ணீர் நிச்சயம் வழங்கப்படும், அணையில் தண்ணீர் வீணாகாமல் இருக்க தெர்மாகோல் போட்டு மூடி வைத்துள்ளோம் என செல்லூர் ராஜுவை கலாய்த்து கருத்து தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.