வீட்டில் இருப்பது போர் அடிக்கிறது என்று சொல்லாதீர்கள் – நடிகை மீனா

முதலில் சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ், அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், தொடர்ந்து மற்ற நாடுகளிலும் இது பரவ  தொடங்கியது. இந்தியாவிலும்,  இந்த நோய் பரவி வருகிற நிலையில், தற்போது இந்த வைரஸ் தமிழகத்திலும் பரவி வருகிறது. 

 இந்நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு வீட்டில் இருப்பது போர் அடிப்பது போல் இருக்கும். இதுகுறித்து, நடிகை மீனா அவர்கள் கூறுகையில், ‘வீட்டில் இருப்பது போர் அடிக்கிறது என்று சொல்லாதீர்கள். குழந்தைகளுடன் விளையாடுங்கள், புத்தகங்கள் வாசித்து பழகுங்கள், சமையல் பழகுங்கள், யோகா, தியானம் மூலம் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.’ என்று கூறியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.