உங்கள மன்னிச்சுட்டோம்ப்பா.. இனி எங்க ஊர்ல இந்த மாறி பேசாதீங்க!! பாக் கேப்டனுக்கு பதிலடி கொடுத்த தென்னாப்பிரிக்க கேப்டன்!!

தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமட் தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவரை பார்த்து… ‘டேய் கருப்பு பயலே வேகமாக அவுட்டாகி விட்டு வெளியேறு’ என்று இனவெறியை தூண்டும் வகையில் பேசி இருந்தார்.

இது ஸ்டம்பின் அருகிலிருந்த மைக்ககில் பதிவாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் இதற்கு உடனடியாக மன்னிப்புக் கோரினார் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ்.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு ப்லெசிஸ் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது..

நாங்கள் பெரிய மனதுக்காரர்கள். எங்கள் அணி ஒழுக்கமானது நாங்கள் உங்களை மன்னித்து விட்டடோம் இனிமேல் தென்னாப்பிரிக்காவில் இவ்வாறு பேசாதீர்கள். என்று பாகிஸ்தான் கேப்டனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாப் டு ப்லெசிஸ்.

author avatar
Srimahath

Leave a Comment