‘வைகை புயல்’ வடிவேலு இப்போ எப்படி இருக்காரு தெரியுமா.? நண்பர்களுடன் வடிவேலு எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்.!

வைகை புயல் வடிவேலு நண்பர்களான மனோபாலா, சந்தானபாரதி, கங்கை அமரன் ஆகியோருடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் காமெடி மன்னனாக கலக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் வைகை புயல் வடிவேலு .சில காலமாக எந்த படத்திலும் நடிக்காத இவரை சினிமாவில் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்த நிலையில் தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

ஆம் சமீபத்தில் இவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.அப்போது நடிகர்கள் மனோபாலா, சந்தானபாரதி, கங்கை அமரன் ஆகியோருடன் வடிவேலு எடுத்து கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதனை நடிகர் மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஷேர் செய்து வருவதுடன் ‌நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலுவை கண்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.