துப்பாக்கியை பயன்படுத்த தயங்க வேண்டாம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு ..!

போலீசார் தனிமையான இடத்திற்கு ரோந்து பணிக்கு செல்லும் போது கை துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டும்.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய பூமிநாதன் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ஆடுகளை எடுத்துச் செல்வதை பார்த்துள்ளார். அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் பூமிநாதன் தனது இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றுள்ளார்.

அப்போது, கீரனூர் பள்ளப்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தை வழிமறித்து விசாரித்துள்ளார். அப்போது மணிகண்டன்(19) தன்னுடன் இருந்த இரண்டு சிறுவர்கள் உதவியோடு பூமிநாதனை கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மணிகண்டன் மற்றும் இரண்டு சிறுவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில்,இன்று காலை தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு பூமிநாதன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசியஅவர்,  ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் கைத்துப்பாக்கிகள் எடுத்து செல்லலாம். உயிருக்கு ஆபத்து என்கிறபோது துப்பாக்கிகளை பயன்படுத்த காவல்துறையினர் தயங்க வேண்டாம் என தெரிவித்தார்.

author avatar
murugan