சென்னை:திமுக மூத்த தலைவரும்,முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் மின்சாரத் துறை அமைச்சருமான ஆற்காடு என்.வீராசாமி அவர்கள்,திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு இடுப்பு எழும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கிடையில், வீட்டில் தவறி விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இவர் திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட காரணத்தால்,திமுகவின் தொடக்கக் காலம் முதல் கட்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றார்.அந்த வகையில்,திமுக முன்னாள் பொருளாளராக 1994 முதல் 2008 வரை பணியாற்றியுள்ளார்.அதன்பின்னர்,தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவராக 2001 முதல் 2006 வரை பணியாற்றியுள்ளார்.மேலும், மூன்று முறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
இதனையடுத்து,உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்ற தேர்தலில் இவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…
Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…