திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி..!

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக எம்எல்ஏவாக பூங்கோதை ஆலடி அருணா தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, 2016-ம் ஆண்டு மீண்டும்   எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா உடல்நலக்குறை காரணமாக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவரது தந்தை ஆலடி அருணா மூன்று முறை ஆலங்குளம் தொகுதியில் திமுக எம்எல்ஏவாக தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan

Leave a Comment