சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் ஒரு சரித்திர சாதனை படைத்து அம்மாவின் ஆட்சி மீண்டும் உருவாக்க வேண்டும். இயக்கத்தை மீட்டு எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். வரும் தேர்தலில் மாபெரும் வெற்றியை நாம் பெறுவோம் என்ற குறிக்கோளுடன் பயணிக்க வேண்டும். சில கட்சிகளுக்கு ஏஜெண்டுகளாக இருந்துகொண்டு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கிறார்கள். நாங்கள் எதிர்பார்த்த குக்கர் சின்னத்தையே தேர்தல் ஆணையம் எங்களுக்கு அளித்தது.
அமமுக அணி தான் முதல் அணியாக இருக்கும். திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் இருக்கும் அணியாக இருக்கும். தொண்டர்கள் ராணுவ கட்டுப்பாட்டுடன் சின்னம்மாவை வரவேற்றனர். சிறுபான்மையினர் மக்களுக்கு திமுக நிச்சயம் பாதுகாவலர்கள் இல்லை; உங்களுக்கு யார் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை சிறுபான்மையின மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
எங்களது அணியில் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் வருமா என இப்போது கூறமுடியாது. சசிகலா சட்டப் போராட்டம் நடத்துவதால் அமமுக தலைவர் பதவியை அவருக்காக காலியாக வைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அணி இல்லை; அமமுக அமைக்கும் அணி தான் முதல் அணி என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…
Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…
Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…
IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65…