தீபாவளி சிறப்பு பேருந்து – நேற்று ஒரே நாளில் 1.65 லட்சம் பேர் பயணம்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து நேற்று ஒரே நாளில் 3300 அரசு பேருந்துகளில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வெளியூர் பயணம். 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து நேற்று ஒரே நாளில் 3300 அரசு பேருந்துகளில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வெளியூர் சென்றுள்ளனர்.

நள்ளிரவு 12 மணி நிலவரப்படி 2,100 அரசு பேருந்துகளுடன் 1200 சிறப்பு பேருந்துகளும் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 659 பயணிகள் அரசு பேருந்துகளில் வெளியூர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment