பள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர்கள் மாற்றம்!

பள்ளிக்கல்வித்துறையில், 2 இயக்குனர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

கொரோனா அச்சுறுத்தலால், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தாலும், பள்ளிக்கல்வித்துறை தங்களது பணிகளை திறம்பட வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறையில், 2 இயக்குனர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் நிறுவன இயக்குனர் நாகராஜா முருகன், பாடநூல்கழக செயலாளராகவும், பாடநூல் கழக செயலாளர் லதா, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.