இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’. இந்த திரைப்படத்தில் நதியா, அசின் தொட்டும்கல், பிரகாஷ் ராஜ், விவேக், ஜனகராஜ், சுப்பாராஜு, ஓ. எ. கே. சுந்தர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருந்தார்.
இந்த திரைப்படம் தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘அம்மா நன்னா ஒ தமிழா அம்மாயி’ என்ற படத்தினுடைய தமிழ் ரிமேக் தான். ரீமேக் என்றாலும் தெலுங்கை விட தமிழில் படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு ஹிட் ஆனது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட வசூல் ரீதியாக மட்டும் இந்த திரைப்படம் 54 கோடி வரை வசூல் செய்திருந்தது.
அதிக சம்பளம் கேட்டு கங்குவா படத்தின் வாய்ப்பை இழந்த பாகுபலி நடிகர்?
இந்நிலையில், படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்படவுள்ளதாம். இந்த இரண்டாவது பாகத்திற்கான கதை எல்லாம் எழுதி முடித்துவிட்டதாகவும், இந்த இரண்டாவது பாகத்தில் நதியாவின் கதாபாத்திரம் இடம்பெறாது எனவும் இயக்குனர் மோகன் ராஜா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “எம்.குமரன் பார்ட்-2-க்கான ஸ்கிரிப்டை எழுதிவிட்டேன், விரைவில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். ஆனால், நதியாவின் கதாபாத்திரம் படத்தில் இடம்பெறாது” என தெரிவித்துள்ளார். இந்த இரண்டாவது பாகத்திலும் ஹீரோவாக நடிகர் ஜெயம் ரவி தான் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி இரண்டாவது பாகம் உருவாவதை போல மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன தனி ஒருவன் இரண்டாவது பாகமும் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி 2 எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…