‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’பட நடிகையை கரம் பிடித்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.!அழகிய ஜோடியின் திருமண புகைப்படங்கள்.!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரான தேசிங்கு பெரியசாமி அதே படத்தில் நடித்த நிரஞ்சனி அகத்தியனை காதலித்து இன்று திருமணம் செய்துள்ளார்.

சமீபத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.இதில் நிதி அகர்வால்,ரக்ஷன் ,நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.தனது முதல் படத்திலையே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த தேசிங்கு பெரியசாமி அதே படத்தில் நடித்த நரஞ்சனியை படப்பிடிப்பின் போது காதலித்துள்ளார் . சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நரஞ்சனி அஜித்தின் காதல் கோட்டை படத்தினை இயக்கி தேசிய விருது வென்ற இயக்குனர் அகத்தியன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இன்று நிரஞ்சனி மற்றும் தேசிங்கு பெரியசாமியின் திருமணம் பாண்டிச்சேரியில் வைத்து நடைபெறவுள்ளது .அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

DesinguPeriyasamy 2

DesinguPeriyasamy