ஐபிஎல் தொடரில் 200 போட்டிகள் விளையாடிய தினேஷ் கார்த்திக்..!!

தினேஷ் கார்த்திக் நேற்று நடந்த போட்டியில் விளையாடியதன் மூலம் 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை நேற்று பெற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 15 வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி  20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். இதில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 95* ருதுராஜ் 64 ரன்கள் எடுத்தனர்.

அதன்பின் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 19.1 ஓவர் முடிவில் தனது அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 202 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டி கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்  200வது ஐபிஎல் போட்டி. அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்னர் 200 ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா  ஆகிய இருவர் மட்டுமே கடந்திருக்கும் நிலையில், தினேஷ் கார்த்திக்  நேற்று நடந்த போட்டியில் விளையாடியதன் மூலம் 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நேற்று நடந்த இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.