திண்டுக்கல்; கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை!

சுமைதூக்கும் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது திண்டுக்கல் நீதிமன்றம்.

முத்தழகுபட்டியை சேர்ந்த செபஸ்தியாரை முன் விரோதத்தால் கடந்த 2014-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்றது. வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அந்தோணி விமல், சின்னப்பராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

அருள் ஆரோக்கிய தாஸ், தங்கம், ஜஸ்டின் தாஸ், ஜான் பிரபாகர், விக்னேஷ் இன்பராஜ், தாமரைக்கண்ணன் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகள் 8 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபாரத்துடன் ஆயுள் தண்டனை வழங்கி திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment