தோனி சிறப்பாக செயல்படுவார்… அனில் கும்ப்ளே..!

இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் தோனி சிறப்பாக செயல்படுவார் என்று அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

இந்த வருடம் ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19-ம் தேதி தொடங்க உள்ளது முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளும் மோதவுள்ளது. இந்நிலை யில் அண்மையில் பேட்டியளித்த இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தன்னுடைய 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பார் என்று கூறியுள்ளார் .

அண்மையில் பேட்டியளித்த அனில் கும்ப்ளே கூறியது தோனி தன்னுடைய 100 சதவீத அர்ப்பணிப்பு மற்றும் திறமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கொடுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவார் ஏனென்றால் அவர் எடுக்கும் பயிற்சிகளை பார்த்து மிகவும் ஆச்சரியமடைந்தேன். அவருடைய ஆட்டத்தை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.