காரசாரமாக முடிந்த காதல் விவகாரம்..தர்ஷனுக்கு அதிர்ச்சி தீர்ப்பு!

நடிகராக களமிரங்க உள்ள பிக்பாஸ் தர்ஷனின் காதல்விவாகர வழக்கில் முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக திரை உலகில் வெளிச்சத்திற்கு வந்தவர் தர்ஷன் அந்நிகழ்ச்சி மூலமாக அதிக ரசிகர்களை பெற்றார்.இந் நிகழ்ச்சிக்கு பின்  அவர் சினிமாவில் நடிக்க உள்ளார்.இந்நிலையில் அன்மையில் சில தினங்களுக்கு முன்பு இவருடைய காதலியான சனம் ஷெட்டி தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக சொல்லி  தர்ஷன்  ஏமாற்றிவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்து  புகார் அளித்தார்.இது சினி உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.இதை தொடர்ந்து தர்ஷன் தன் மீது தொடர்ந்த வழக்குக்கு முன் ஜாமீன் கேட்டு  நீதிமன்றத்தை நாடினார்.ஆனால் இந்த வழக்கு தொடர்பாக தர்ஷனுக்கு பெயில் வழங்க முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டார்தாம். இது அவர் தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என சலசலக்கப்படுகிறது.

author avatar
kavitha