திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி தனுஷ் – ஐஸ்வர்யா மனு.!

Divorce: நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ரஜினி மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

20 ஆண்டு கால திருமண வாழ்க்கையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றன. இது குறித்து கடந்த 2022ம் ஆண்டு இருவரும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினர் பேச்சு வார்த்தைகள் நடத்தியும் பயன் அளிக்கவில்லை. இந்நிலையில், இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.