நான் அரசியல் பயிராகவே வளர்ந்தேன். உயர்ந்த பொறுப்புகளுக்கு சென்றாலும், உங்களில் ஒருவன்தான் நான் என உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய கூட்டரங்கில் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், முதல்வரின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். உங்களில் ஒருவன் புத்தகத்தின் முதல் பிரதியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட, அமைச்சர் துரை முருகன் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், என்னுடைய முதல் 23 ஆண்டுகால வாழ்க்கைதான் உங்களில் ஒருவன் புத்தகம்; விளையும் பயிர் முனையிலேயே தெரியும் என்பார்கள், நான் அரசியல் பயிராகவே வளர்ந்தேன். உயர்ந்த பொறுப்புகளுக்கு சென்றாலும், உங்களில் ஒருவன்தான் நான்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி போல் எனக்கு எழுதவும், பேசவும் தெரியாது, அவரை போல எழுதும் முயற்சியில் ஒன்றுதான் என் சுயசரிதை புத்தகம். அரசியல் என்பது என்னுடைய ரத்தத்தில் இருந்தது; எனது சிந்தனை, செயல் அனைத்துமே கழகம் தான் என்பது என் சுயசரிதையை வாசித்தால் தெரியும் – முதல்வர் மு.க. ஸ்டாலின் என்னை பண்படுத்திய கோபாலபுரம் இல்லம் குறித்தது தான் என் சுயசரிதை புத்தகம்.
திராவிட ஆட்சி முறைதான் எங்களது கோட்பாடு; திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும். நான் பிறந்த வருடம் குலக்கல்வியை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது; தற்போது நீட்-ஐ எதிர்த்து போராடி வருகிறோம்.
தமிழகம், கூட்டாட்சி தத்துவம் பற்றி அதிகம் பேசி வரும் ராகுல் காந்திக்கு நன்றி; மாநில உரிமைகளை மீட்க நாம் ஒன்றிணைய வேண்டும். மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…