தேசிங்கு பெரியசாமி-நிரஞ்சனி தம்பதியினருக்கு திருமண பரிசளித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட தயாரிப்பாளர்.!

தேசிங்கு பெரியசாமி-நிரஞ்சனி தம்பதியினருக்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட தயாரிப்பாளர் திருமண பரிசாக கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

சமீபத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.இதில் நிதி அகர்வால்,ரக்ஷன் ,நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.தனது முதல் படத்திலையே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த தேசிங்கு பெரியசாமி அதே படத்தில் நடித்த காதல் கோட்டை படத்தினை இயக்கி தேசிய விருது வென்ற இயக்குனர் அகத்தியன் மகளான நரஞ்சனியை படப்பிடிப்பின் போது காதலித்துள்ளார் .

அதன் பின் இந்த காதல் ஜோடி பிப்ரவரி 25-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.இந்த புதுமண தம்பதிக்கு திரையுலக பிரபலங்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட தயாரிப்பாளரான ஆண்டோ ஜோசப் தேசிங்கு பெரியசாமி -நிரஞ்சனி தம்பதியினருக்கு திருமண பரிசாக கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த தேசிங்கு பெரியசாமி,மிக்க நன்றி சார். பெரிய ஆச்சரியம். இந்தப் பரிசுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் பரிசாக வழங்கிய தகவல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.