துணை முதல்வர் நகர ஊரமைப்பு திட்டம் பற்றி ஆய்வு – முறையாக அனுமதி தர அறிவுறுத்தல்!

நகர ஊரமைப்பு திட்டம் பற்றி ஆய்வு செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்டடங்களுக்கு உரிய வகையில் அனுமதி தரவேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நகர ஊரமைப்புத் துறை மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கட்டடங்களுக்கு உரிய வகையில் அனுமதி வழங்க வேண்டும் எனவும் நிலங்களை வகைப்படுத்துதல் சரிவர மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட அலுவலக பணிகளை துரிதப்படுத்துதல், பணியாளர்களை நியமிப்பது குறித்து பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் விண்ணப்பதாரரின் பணிகளை விரைவாக முடிக்க ஒரு முறை மட்டுமே தகவல்களை கேட்டுப் பெற வேண்டும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் இ மெயில் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும்படியும் அதிகாரிகளுக்கு துணை முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
Rebekal