இன்ஜின் கோளாறு காரணமாக டெல்லி விமானம் வேறு இடத்தில் தரையிறக்கம்.. பயணிகள் அவதி…

டெல்லியில் இருந்து குஜராத் சென்ற உள்ளூர் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணாமாக ஜெய்ப்பூரில் தரையிறங்கி உள்ளது. 

சில தினங்களுக்கு முன்னர் தான் இந்தியாவில் இருந்து வெளிநாடு பரந்த தனியார் விமானம், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டதை அறிந்திருப்போம்.

தற்போது அதே போல வேறு ஒரு விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் உள்நாட்டு போக்குவரத்து விமானம் டெல்லியில் இருந்து குஜராஜ் மாநிலம் வடோதரா வுக்கு பறந்தது.

ஆனால், அந்த விமானத்தின் இன்ஜினில் சிறு அதிர்வு ஏற்பட்ட காரணத்தால் பாதுகாப்பு கருதி  விமானத்தை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் தரையிறங்கி விட்டனர்.

பின்னர், அங்கிருந்து வேறு விமானம் ஏற்பாடு செய்து ஜெய்ப்பூரில் இருந்து பயணிகள்  வடோதராவுக்கு சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை ) இரவு நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்த விசாரணையை தற்போது மத்திய விமான போக்குவரத்துக்கு இயக்குனரகம் தொடங்கியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment