தமிழகத்தில் இதுவரை 4,58,900 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!

தமிழகத்தில் இன்று 5,735 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,735 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,58,900 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் புதிதாக 5,697 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,14,208 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் இன்று 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,502 ஆக உயர்ந்துள்ளது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.