டெல்லியில் மேலும் 663 ஐ.சி.யூ படுக்கைகள் – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் அடுத்த சில நாட்களில் 663 ஐசியு படுக்கைகள் கூடுதலாக வரவழைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

டெல்லியில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ள நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசாங்கத்தால் அடுத்த சில நாட்களில் 663 ஐசியு படுக்கைகள் கூடுதலாக சேர்க்கப்படும் என்று கூறினார். மேலும், கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், நகரத்தில் உள்ள மருத்துவர்கள் கொரோனா வைரஸ் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.

டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளன. இருந்தாலும் தற்போது போதுமான படுக்கைகள் உள்ளன. ஆனால், ஐ.சி.யூ படுக்கைகளுக்கு பற்றாக்குறை உள்ளது, அதை நாங்கள் கவனித்து வருகிறோம். எங்கள் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இதற்கு மிகச் சிறப்பாக பதிலளித்து வருகிறார்கள் என்று கெஜ்ரிவால்  கூறினார்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment