மாஞ்சா கயிற்றால் கழுத்தறுபட்டு பரிதாபமாக உயிரிழந்த பொறியியல் பட்டதாரி!

டெல்லியியை சொந்த ஊராக கொண்டவர்தான் பொறியியல் பட்டதாரியான மாணவ் ஷர்மா ரக்ஷா பந்தன் விழா கொண்டாடியுள்ளார். இவர் தனது வீட்டிலிருந்து தனது தங்கையுடன் டெல்லி ரோகிணி பகுதிக்கு, சென்று .கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பாலத்தின் மீது செல்கையில் பட்டம் ஒன்று அவர் கழுத்தில் சிக்கி கொண்டது. அந்த பட்டம் விட மாஞ்சா கயிறு பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் மாஞ்சா கயிறு  கழுத்தில் சிக்கி அதிகமாக ரத்தம் வெளியேறியுள்ளது. பதறிப்போன சகோதரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இந்த தகவலை டெல்லி ஏடிஜிபி ராஜேந்திர சிங் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.