விருதுநகர் பட்டாசு அலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று பிற்பகல் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்திலேயே 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்துள்ளனர். அச்சகுளத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த 33 பேருக்கு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.