வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது ஹமூன் புயல்.! வானிலை மையம் தகவல்.!

மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. ‘ஹமூன்’ என பெயர் சூட்டப்பட்ட இந்த புயல் நேற்று (24 ஆம் தேதி) தீவிர புயலாக மாறி வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இதனையடுத்து மேலும் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக வலுப்பெற்றது.

இந்த தீவிர புயல் காரணமாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

மிக தீவிர புயலாக வலுப்பெற்ற ஹமூன் புயல், ஓடிசாவின் பாரதீப்புக்கு கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும், மேற்குவங்கத்தின் டிக்காவுக்கு தெற்கு-தென்கிழக்கில் 270 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டது. தொடர்ந்து இந்த  புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவிழந்து வங்கதேச கரையை கெபுபரா மற்றும் சிட்டகாங் இடையே இன்று (25 ஆம் தேதி) கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்படி, வங்கக்கடல் பகுதிகளில் உருவான ஹமூன் புயல், தீவிர புயலாக மாறி கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கிமீ வேகத்தில் கிட்டத்தட்ட வடகிழக்கு நோக்கி நகர்ந்து, புயலாக வலுவிழந்து கடலோர வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.