அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் 10 வரை “CUET-PG” தேர்வு!

முதுநிலை படிப்புக்கான நுழைவு தேர்வு அடுத்தாண்டு ஜூன் 1 முதல் 10 வரை நடைபெறும் என்று அறிவிப்பு.

முதுநிலைப் படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் ஜூன் 10 வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 45 மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் தேர்வு நடத்தப்படுகிறது.

CUET-PG மதிப்பெண்ணைப் பயன்படுத்தி முதுகலைப் படிப்புகளில் மாணவர்கள் பல பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு முயற்சி செய்ய இது சிறந்த வாய்ப்பு என்று யுஜிசி தலைவர் எம் ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment