, , ,

#IPL2022: டாஸ் வென்ற சென்னை.. முதலில் பவுலிங் செய்யும் ராஜஸ்தான்!

By

ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் 68-வது போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதியை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் 68-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்கள்:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, மொயீன் அலி, சிவம் துபே, அம்பதி ராயுடு, ஜெகதீசன், தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், பிரசாந்த் சோலங்கி, மதீஷா பத்திரனா, முகேஷ் சவுத்ரி.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ஓபேட் மெக்காய்.

Dinasuvadu Media @2023