சி.எஸ்.கே ரசிகர்கள் உற்சாகம், தோனி சென்னை ரசிகர்கள் முன்னிலையில் ஓய்வு பெற உள்ளார்

ஐபிஎல் இல் சி.எஸ்.கே அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ்.தோனி வரும் ஐபிஎல் 2023 இல் சென்னை ரசிகர்கள் முன்னிலையில் ஓய்வு பெற உள்ளார்.

ஐபிஎல் 2023 போட்டிகள் பழைய வழக்கப்படி ஹோம் மற்றும் அவே (Home & Away) முறையில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்தார். இதனால் ஒவ்வொரு அணியும் தனது சொந்த (Home) மற்றும் வெளி (Away) மைதானங்களில் விளையாடும்.

மேலும் சி.எஸ்.கே அணி சென்னையில் 2023 ஆம் ஆண்டு விளையாடும் என்பதால், சென்னை ரசிகர்கள், சேப்பாக்கம் மைதானத்தில் தோனி விளையாடுவதைப் பார்க்கும் உற்சாகத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது தோனியின் ஓய்வு குறித்து கேட்ட போது, சென்னை ரசிகர்கள் முன்னிலையில் தான் தனது கடைசி போட்டி இருக்கும் என்று தோனி கூறியிருந்தார்.

மேலும் தோனி இது குறித்து பேசும் போது, ரசிகர்களுக்கு நன்றி கூறும் வாய்ப்பாக சென்னை மற்றும் அனைத்து ஊர்களில் உள்ள ரசிகர்களுக்கும் நன்றி கூறி விட்டு ஓய்வு முடிவை அறிவிப்பேன் என்று தோனி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தோனி கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரின் போது சென்னையில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

author avatar
Muthu Kumar

Leave a Comment