பயிர் காப்பீடு: பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்!

பயிர்காப்பீடு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு கட்டணத்தில் முன்பியிருந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் மத்திய அரசின் பங்களிப்பினை குறைக்கும் வகையில் உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி, மாநிலத்தில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முன்பியிருந்தபடி மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில், வேளாண்துறையில் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என ஏற்கனவே தமிழக அரசு பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் மேற்கோள்கட்டியுள்ளார்.

தமிழகத்தில் சாகுபடி பரப்பளவினை அதிகரித்தல், ஒருமுறைக்கு மேல் சாகுபடி செய்யும் பரப்பினை இரட்டிப்பு செய்யுதல், உணவு தானியங்களின் உற்பத்தி திறன் அதிகரித்தல் ஆகியவை மூன்று தொலைநோக்கு பார்வையுடன் வேளாண்மைக்கு என தனி வரவு செலவு திட்ட அறிக்கையை நடப்பாண்டு முதல் தாக்கல் செய்ய உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் முக்கிய திட்டங்களின் ஒன்றான பிரதம மந்திரின் பயிர்காப்பீடு திட்டத்தினை தமிழக அரசு தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறது. பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ள பரப்பளவும், பதிவு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காப்பீடு கட்டணம் மானியத்தில் மத்திய அரசின் பங்கினை 49% லிருந்து பாசன பகுதிகளுக்கு 25% ஆகவும், மானாவரி பகுதிகளுக்கு 30% ஆகவும் குறைத்து நிர்ணயித்தியிருப்பதால், கடந்த 2016-17ல் ரூ.566 கோடி இருந்த மாநில அரசு பங்கானது, 2020-21ல் ரூ.1918 கோடியாக அதாவது (239%) அதிகரித்துள்ளது எனவும் கடிதத்தில் விளக்கமளித்துள்ளார்.

எனவே, இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது தமிழக அரசுக்கு பெரும் சவாலாகவும், கடினமாகவும் உள்ளதால், பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பினை முன்பியிருந்தபடியே மாற்றியமைக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

1 min ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

24 mins ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

30 mins ago

எங்க திட்டம் தான் எங்களுக்கு கை கொடுத்துச்சு – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி !!

Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி  வெற்றி பெற்றதை பற்றி பேசி  இருந்தார். ஐபிஎல் தொடரின்…

1 hour ago

உங்க போன் ரொம்ப ஹீட் ஆகுதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!

Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…

2 hours ago

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

3 hours ago