மெக்சிகோவில் கிரேன் விபத்து..!-5 பேர் பலி..!

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கிரேன் விழுந்து 5 கட்டட பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள மெக்சிகன் நகரில் சான்டா லூசியா ராணுவ தளத்தில் எகாடெபெக் டி மொரிலோஸ் நகராட்சியில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் அப்பகுதியில் பெலிப் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்கு வசதியாக இருக்கும் காரணத்தால் இந்த பாலம் நடைபெறும் பணி உள்ளது.

இந்த பாலத்தின் வலுவிற்காக இதில் ஸ்டீல் பார்கள் வைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. கிரேன் அதிகமான சுமையால் முறிந்து விழுந்துள்ளது. அந்த கிரேன் 98 அடி நீள பார்களை சுமந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த 5 தொழிலாளர்கள் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.