#BREAKING: தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு.!

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள்  பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், 105 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டிக்கு கைதானவர்களை அழைத்துச் செல்வது கடினம் என்பதால், சாத்தான்குளம் வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரை தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன் ஆஜர்ப்படுத்த அனுமதி வழங்கி உள்ளது.

மேலும், தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதிக்கு  அனைத்து விதமான அதிகாரம் வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

author avatar
murugan