சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.!

நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது

சின்னத்திரையில் பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல கெட்டப்கள் போட்டு நடித்து மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகர் நாஞ்சில் விஜயன். இவர்  கடந்த 2020-ஆம் ஆண்டு டிக் டாக் மூலம் பிரபலமான சூர்யாதேவியை என்பவரை அவதூறாக பேசி, மிரட்டி தாக்கியதாக புகார் கொடுக்கப்பட்டிருந்தது.

சூர்யாதேவி அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் நாஞ்சில் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனை தொடர்ந்து,  விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் விசாரணையில் இருந்து வந்த இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 17-ம் தேதி நாஞ்சில் விஜயன்கைது செய்யப்பட்டு  புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தற்போது, நாஞ்சில் விஜயனுக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment