ஒரு இந்தியனாக ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொள்ள போகிறேன்.! கமல்ஹாசன் அறிவிப்பு.!

நாளை ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்ள உள்ளார் என அவரே வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் ஒற்றுமை யாத்திரை தொடங்கி 100வது நாளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஹரியானா மாநிலத்தில் நடைபயணம் தொடர்கிறது. நாளை தலைநகர் டெல்லியில் ஒற்றுமை யாத்திரை தொடர உள்ளது.

இந்நிலையில் இந்த ஒற்றுமை யாத்திரையில் தானும் கலந்து கொள்ளப்போவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதனை ஒரு விடியோவாக அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், ராகுல்காந்தி, ‘ நான் ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டும்.’ என கடிதம் மூலம் கேட்டிருந்தார் அதன் பேரில், ஒரு கட்சியின் தலைவராக அல்லாமல், இந்திய குடிமனாக இதில் கலந்துகொள்ள போகிறேன். வரும் டிசம்பர் 24ஆம் தேதி (நாளை) ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொள்ள உள்ளேன். என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment