ராமநாதபுரத்தில் நடுக்கடலில் கவிந்த நாட்டு படகு – மூன்று பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் நடுக்கடலில் நாட்டுப்படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு. 

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில்  குலதெய்வ வழிபாட்டுக்கு பின் அனுமதி இன்றி நாட்டுப் படகில் சவாரி மேற்கொண்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நாட்டுப் படகு கடலில் மூழ்கியுள்ளது.

இதில் இருளாயி, மணிமேகலை மற்றும் முத்துமணி ஆகியோ ர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல் இலந்தை கூட்டம் கடற்கரையில் கரை ஒதுங்கி உள்ளது. கடலில் நாட்டு படகு  கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment