சென்னை ராணி மேரி கல்லூரியில் வாக்கும் எண்ணும் பணிகள் தாமதம்….!

சென்னை ராணி மேரி கல்லூரி மையத்தில் 4 தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்குவதில் தாமதம்.

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 8 மணியளவில் தொடங்கியது. ஏப்-6ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 72.81 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், 4.09 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை ராணி மேரி கல்லூரி மையத்தில் 4 தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்குவதில் தாமதம்  ஏற்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.