இருமல் மருந்து சர்ச்சை – உற்பத்தியை நிறுத்த உத்தரவு!

ஹரியானா மைடன் பார்மா இருமல் சிரப் தயாரிப்பை நிறுத்தி 12 விதிமீறல்களுடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஹரியானாவில் உள்ள Maiden Pharma நிறுவன தயாரிக்கும் இருமல் சிரப் மருத்துங்களின் உற்பத்தியை நிறுத்த அம்மாநில உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார். சோனியப்பட்டில் உள்ள மருந்து நிறுவனத்தின் உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அனில் விஜ் தகவல் தெரிவித்துள்ளார். Maiden Pharma நிறுவன இருமல் மருந்தால் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்ததாக சர்ச்சையானதையடுத்து மருந்து உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் ஹரியானா மருந்து துறையினர் இணைந்து சோதனை நடத்தினர். சுமார் 12 குறைபாடுகள் கண்டறியப்பட்டன, அதை மனதில் வைத்து, மொத்த உற்பத்தியை நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மருந்து சர்ச்சை தொடர்பாக தங்கள் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கடுமையான குறைபாடுகள் கண்டறியப்பட்டன என்று தெரிவித்த அமைச்சர், 12 விதிமீறல்களை பட்டியலிட்டு அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

சோனிபட்டின் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் WHO குறிப்பிட்டுள்ள நான்கு மருந்துகளின் மாதிரிகள் கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அறிக்கைகள் இன்னும் வரவில்லை. அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. காம்பியாவில் 66 குழந்தைகள் இறப்புகளுடன் தொடர்புடைய நான்கு இருமல் சிரப்கள் ப்ரோமெதாசின் வாய்வழி தீர்வு, கோஃபெக்ஸ்மாலின் பேபி இருமல் சிரப், மாகோஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் ஆகும்.

இதனிடையே, இந்தியாவில் மெய்டன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 4 இருமல் சிரப் மருந்துகள் காம்பியாவில் 66 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் இதனை உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும் கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்பின், அந்த மருந்துகள் காம்பியாவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், இந்தியாவில் விற்பனைக்கு உரிமம் இல்லை எனவும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளித்திருந்தது.

இந்த நிலையில், அந்த நிறுவனத்திடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் ஆய்வக அறிக்கைகளுக்கு காத்திருக்கும் நிலையில், நிறுவனத்தின் மொத்த உற்பத்தியை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக ஹரியானா சுகாதார அமைச்சர் அனில் விஜ் கூறியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment