சேலத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வறுமைகோட்டியிற்கு கீழ் உள்ளவர்கள் உட்பட பலருக்கு 2 லட்சத்து 11 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இல்லாத போலியான நபர்கள் மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் குடிசை மாற்றுவாரிய பொறியாளர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடிசை மாற்று பொறியாளர்கள் ரவிக்குமார், ஜெயந்திமாலா மற்றும் உதவி பொறியாளர்கள் சரவணன், சீனிவாசன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2017 முதல் 2019 வரை பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில், இதுபோன்று முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், முறைகேடு செய்த பணத்தை அதிகாரிகள் 4 பேரும் பங்கிட்டு கொள்ள முயற்சி செய்ததாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். துறை ரீதியாக விசாரணை நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…