கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றும் பணி தீவிரம்

கொரோனா வைரஸ் தொற்று  பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை விடப்பட்டது. மேலும், மால்கள், திரையரங்குகள் மட்டுமின்றி நாட்டின் எல்லைகளும்,  மாநில மற்றும் மாவட்ட எல்லைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால், பெரிய நகரங்களில் மக்களின் நடமாட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. இந்திய ரயில்வே நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி வருகிறது.  இந்த நோய் தொற்றின் காரணமாக அனைத்து ரயில்களையும் ரத்து செய்தது.

இந்நிலையில் கொரோனா காரணமாக தனிமை வார்டுகளின் தேவை அதிகரித்துள்ளதால் ரயில் பெட்டிகளில் தனிமை வார்டுகளை அமைக்கும் பணியை  இந்திய ரயில்வே மேற்கொண்டுள்ளது. படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் நடுப்படுக்கைகள், எதிர்ப்புறம் உள்ள படுக்கைகள், ஏணிகள் ஆகியவற்றை நீக்கித் தனிமை வார்டுகள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள்  மும்முரமாக நடைபெற்று வருகிறது.