திரிபுராவில் 24 பிஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் 24 பிஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் பிப்லப குமார் டேப், அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் 24 பிஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும், அம்மாநிலத்தில் 86 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், 2 பேர் தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்தாகவும் அவர் கூறினார்.