நல்ல செய்தி: குணமானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1630 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 30,271 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இரண்டாவது நாளாக ஒரே நாளில் 2,141பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 52,334 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 41 பேர் உயிரிழப்பு. இதனால் மொத்தமாக கொரோனா தோற்றினாள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1630  பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 30,271 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 23,509  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.